மார்க்க விவகாரங்களில் பலதரப்பட்ட வகையில் கருது முரண்பாடுகள் நிகழ்ந்து வருகின்றன. இந்த சமயத்தில் சென்ற வாரங்களில் உயன்வத்தையில் ஓர் ஜும்மா உரை அஷ் ஷைக்ஹ ஆதில் ஹசன் அவர்களால் நடாத்தப்பட்டது. இதில் இரவுத் தொழுகை (தராவீஹ) 8 ரகாத்கள் தான் 20 க்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. அவ்வாறு ஆதாரம் கொண்டுவருபவர்க்கு தாம் 10 இலட்சம் ரூபாய் காசு தருபதாகவும் இதை ஒரு சவாலாகவும் பிரகடனப் படுத்தினார்.
இந்த சவாலை எடிகொள்ளும் முகமாக உயன்வத்தை வாலிபர் அமைப்பு தாம் அதாரம் கொண்டுவரத் தயார் என்றும் ஆதில் ஹசன் அவர்களுக்கு 10 இலட்சம் ரூபாய் காசுடன் வருமாறும் அழைப்பு விடுத்தது ஓர் சுவர் ஒட்டி பகிரப்பட்டுள்ளது. மேலும் நாளை 02 .09 .10 வியாழக் கிழமை இரவுத் தொழுகைக்கு பின்னால் உயன்வத்தை பெரிய பள்ளி மஸ்ஜிதுன் நூர் இல் கலந்துரையாடலுக்கு இவர் அழைக்கப்பட்டுள்ளார்.
நாளை இது தொடபான முடிவுகளை இந்த தளதில் எதிர் பார்க்கவும் இன்ஷா அல்லாஹ்.
(சுவரொட்டியின் புகைப்படத்தை நாம் விரைவில் சமர்ப்பிப்போம்)
No comments:
Post a Comment