Saturday, April 9, 2011

வழிகேட்டிலே தலைவிரித்து ஆடும் ஒரு முஸ்லிம் கூட்டம்

சத்திய மார்கத்தை சரியாக செய்ய வக்கில்லாத எமது சமூகத்தில் உள்ள ஒரு கூட்டம் எந்த ஒரு வெக்கமும் இல்லாமல் பிற மதங்களுக்கு வக்காலத்து வாங்கும் நிலை இன்று சாதாரணமாகிப் போய் விட்டது. மாவனல்லையில் மாரவைப் பகுதியில் வசிக்கும் பௌத்த மதத்தை சேர்ந்த ஒரு மனிதர் சில தினங்களுக்கு முன்னாள் மரணமடைந்துள்ளார். இவரின் இறுதி மரண சடங்குகள் இன்று காலை நேரம் நடைபெற்றது.

இதனை முன்னிட்டு ஹிந்குலோயா பள்ளிவாயலை தன்னகத்தே கொண்டு ஆட்சி புரியும் பெரும் தலைவர் மார்கள் இவரின் மரண சடங்குகளில் எமது முஸ்லிம் மக்களும் கலந்து சிறப்பிக்க வேண்டும் என்று அறிவித்தல் ஒன்றை விடுத்திருந்தனர். இந்த கேடு கேட்ட நிலைமையில் எமது (முஸ்லிம்) மக்கள் மரணமடைந்த அந்த மனிதரின் வீட்டிலிருந்து டவுன் வரை (மாறவை வீதி) உள்ள வீடுகளிலும் கடை ஓரங்களிலும் வெள்ளைக் கொடிகளை தொங்க விட்டு வீதியில் உள்ள சுவர்களிலும் பாதைகளிலும் banner கலை போட்டு மார்க்கத்துக்கு முரணாக அந்நிய மதத்தை பின்பற்றும் ஷிர்க்கான காரியங்களிலே ஈடுபட்டுள்ளனர்.

இஸ்லாம் காட்டித் தரும் வழிமுறை மரணமடைந்த வீட்டினருக்கு உணவளித்தல். இதனை இஸ்லாத்தில் பின்பற்ற தவறிய எமது சமூகம் அந்நிய மதத்தவர்களுக்கு வாரி வழங்குகின்றன படு கேவலமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அது மற்றுமல்லாது மரணத்தை கொண்டு செல்லும் வாகனத்தை பௌத்த மக்கள் கையால் தள்ளி செல்வது போல் எமது மடையர்களும் தொப்பி அணிந்து தள்ளி சென்றனர்.

யார் ஒரு சமுதாயத்திற்கு ஒப்பாகிறாறோ அச்சமூகத்தைச் சேர்ந்தவரே (அபூ தாவூத்: 4031) என இஸ்லாம் கூற, முஸ்லிம் எனக் கூரிக்கொள்ளகூடிய எமது மக்கள் கூட்டம் தலை கீழாக மாறிக்கொண்டிருக்கின்றனர்.

இதனை அறிவித்த பள்ளிவாயல் தலைவர்கள் மார்க்கத்தை சரியான முறையில் எத்தி வைக்க தவறியவர்களை அல்லாஹ் நாளை விசாரிக்க மாட்டார்கள் என பயமில்லாமல் இருக்கின்றார்களோ தெரியவில்லை. இவர்களை கண்மூடி தனமாக பின்பற்றும் மக்களுக்கும் இதிலே பங்குண்டு என்பதையும் மக்கள் மறந்து விடக்கூடாது!

இப்படிப்பட்ட நடத்தைகள் எமது சமூகத்தில் இன்னும் காணப்படுவது கவலைக்குரிய விடயம் தான்.

1 comment:

  1. அடேய் நீ கொஞ்சம் தமிழ்ல உள்ள புகாரி தொகுப்ப வாசிச்சிட்டு சும்மா மார்க்கம் தெரிஞ்ச மாதிரி கத்தாதே!!!!!!உள்ளம் ஈமான் ஆழ பூர்த்தியான நிலைமை ல குப்ர் கலிமா கூட இக்கட்டான நிலைமையில் சொல்லலாம்!!!!! மோடயன் மாதிரி நீ மட்டும் தான் என்னமோ post பண்ண தெரியும் மாதிரி தடமாராதே .................

    ReplyDelete